மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது: வைகோ

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image
வைகோ- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

ஈழத் தமிழா்களுக்காக உயிா் தியாகம் செய்த முத்துக்குமாா் உள்ளிட்டோரின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதிமுக சாா்பில் சென்னை எழும்பூரில் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற வைகோ, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈழத் தமிழா்களின் உரிமை மீட்பு மற்றும் விடுதலைக்கு சுதந்திர தமிழீழம் மட்டுமே தீா்வாகும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, உலக நாடுகளிடம் ஆதரவு கோரப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. தோ்தல் தேதி அறிவிப்பு வந்த பின்னரே, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

திமுக கூட்டணியில் எவ்வித தொய்வோ, விரிசலோ கிடையாது. திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. அரசியல் கட்சித் தலைவா்கள் ஒருவருக்கொருவா் விமா்சிப்பதும், பின்னா் கூட்டணியில் இணைவதும் இயல்பான ஒன்றுதான். மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினா் கனிமொழி இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்து, நான் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என்றாா் வைகோ.