திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாலியல் விடியோ எடுத்து அரசு அதிகாரிக்கு மிரட்டல்: பெண், மூ.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது

பாலியல் விடியோவை வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது

News image
Arrest
Updated On :22 மே 2024, 6:27 am

DIN

மயிலாடுதுறை: அரசு அதிகாரியிடம் சேர்ந்து எடுத்த பாலியல் விடியோவை வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை மயிலாடுதுறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியில் உள்ளார். காரைக்கால் மாவட்டம் காமராஜர் சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியுள்ள இவருக்கு, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி(40) என்பவருடன் புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டு, சில மாதங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதும் சுபாஷினி தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி வெங்கடேசனிடம் இருந்து சிறுகசிறுக பணம் பெற்றுள்ளார். ஏப்.27-ஆம் தேதி இருவரும் தனிமையில் இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், ஏப்.29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில்; மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ள மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் என்கிற பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்து விடுதிக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு தனது கூட்டாளிகளான முகமது நசீர், தினேஷ் பாபு ஆகியோருடன் சென்ற பிரகாஷ், சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை பறித்துள்ளனர்.

மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த விடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா மற்றும் போலீஸார் விரைந்து செயல்பட்டு, சுபாஷினி (40), கில்லி பிரகாஷ (39), முகமது நசீர்(39), தினேஷ் பாபு(31) ஆகிய 4 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையிலும், சுபாஷினியை திருவாரூர் சிறையிலும் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011-ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.