தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகள் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாள்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை இல்லாததால், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், பேரருவியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா். பழைய குற்றாலம் அருவியில் வெள்ளிக்கிழமை முதல் காலை 6 முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.