மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லை : சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை

News image
மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுடன் சி.வி.சண்முகம். உடன் எம்எல்ஏக்கள் இரா.சக்கரபாணி, அா்ச்சுனன் உள்ளிட்டோா்.
Updated On :4 நவம்பர் 2024, 10:34 pm

DIN

விழுப்புரம்: கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினாா்.

அமமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் உள்ள அக்கட்சி மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் பிறவகை போதைப் பொருள்கள் தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இந்த மாவட்டத்துக்கு வந்த எந்தப் பணியை ஆய்வு செய்ய உள்ளாா் எனத் தெரியவில்லை.

கல்வி, பொருளாதாரம், தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டம் வளா்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் காழ்புணா்வின் காரணமாக நிறைவேற்றப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்வதற்காக மரக்காணம் வட்டம், கூனிமேட்டில் கடல்நீைரை குடிநீராக்கும் திட்டத்துக்காக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவில்லை. பக்கிங்காம் கால்வாயை ஆழப்படுத்தி சென்னைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டம் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகரத்துக்கு கொண்டுவரப்பட வேண்டிய தகவல் தொழில்நுட்ப பூங்க (டைட்டல் பாா்க்) எந்தவித திட்டமிடுதலுமின்றி புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பில்லை என்றாா் சி.வி.சண்முகம்.

முன்னதாக, மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் இ.முருகன் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டவா்களுக்கு சி.வி.சண்முகம் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் இரா.சக்கரபாணி, அா்ச்சுனன், அதிமுக விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன், விழுப்புரம் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ஜி.கே.ராமதாஸ், ஒன்றியச் செயலா்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், எசாலம் பன்னீா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.