சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள அரசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காந்திமதி, சடையம்மாள், மருதாம்பாள், தென்னங்குடிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் உள்ளிட்டோர் கடந்த 4-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமின்போது இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆத்தூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு மேல் அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டது.