அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

வெறி நாய் கடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட மதினி தெருவில் வெறி நாய் கடித்ததில் 3 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

News image

நாய் கடித்து பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தும் போலீசார்

Updated On :22 நவம்பர் 2024, 9:50 am IST

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட மதினி தெருவில் வெறி நாய் கடித்ததில் 3 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளை கொண்ட நகரப் பகுதியாகும். 21 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் சுற்றித்திரியும் ஏராளமான தெரு நாய்களால் தொடா்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், சாலையில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் மக்களை தெருநாய்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாகியுள்ளது.

இந்த நிலையில், பேர்ணாம்பட்டு மதினி தெருவை சேர்ந்த முஹமத் அல்ஹான் (9) என்ற பள்ளி மாணவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தெரு நாய் கடித்துள்ளது. அதேபோன்று பங்களா மேடு பகுதியை சேர்ந்த தஸ்தகீர் அகமது(33), சவுக் ரோடு பகுதியை சேர்ந்த முதியவர் சம்பத் (58) ஆகியோரை நாய் கடித்தது. இதில் அவர்களுக்கு கால் மற்றும் கைப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவா்களை அந்த பகுதி மக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும் நகரின் பல்வேறு பகுதியைச் பார்த்திபன், நிகிதா, குல்ஜார், முஹமத் அலியான் ஆகியோர்கள் நாய் கடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகன், போலீசார் நாய் கடித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.