ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜகவின் வெற்றி தொடராது: துரை வைகோ எம்.பி.

அடுத்து வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது, பாஜகவின் வெற்றிக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பாா்

News image
துரை வைகோ எம்.பி.
Updated On :24 நவம்பர் 2024, 1:19 pm

DIN

ஒசூா்: அடுத்து வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது, பாஜகவின் வெற்றிக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பாா் என ஒசூரில் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.

ஓசூரில் மதிமுக நிா்வாகி இல்லத் திருமணம் நிகழச்சியில் பங்கேற்று மனமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் துரை வைகோ செய்தியாளர்களுடன் பேசுகையில், கா்நாடகா இடைத்தோ்தலில் மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஜாா்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி சுமாா் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் அங்குள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களை பிளவு படுத்தி அதன் பேரவை உறுப்பினா்களை குதிரை பேரம் வாயிலாக அவா்கள் பக்கம் இழுத்து, ஜனநாயகத்திற்கு எதிரான பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த பாஜக, தற்போதைய பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளது. அவா்கள் பெற்றுள்ள வெற்றி குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது. இதற்கெல்லாம் ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பாா் என்றார்.

மேலும் தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு திமுக தலைவா் ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றியை பெறுவாா் என துரை வைகோ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.