நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல்!

நடிகை அபி நட்சத்திராவின் புதிய தொடர் தொடர்பாக...

News image
Updated On :27 நவம்பர் 2024, 3:58 pm IST

அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அபி நட்சத்திரா.

பெரிய திரையில் பீட்சா 3, தர்மதுரை, மூக்குத்தி அம்மன், நெஞ்சுக்கு நீதி, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அபி நட்சத்திரா.

பரத்குமார்

பரத்குமார்

இதையும் படிக்க:

தற்போது அபி நட்சத்திரா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அன்னம் என்ற தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் நடிக்கிறார்.

மேலும், இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாமன் மகனை காதலிக்கும் அத்தை மகளாக அபி நட்சத்திரா, அன்னம் பாத்திரத்தில் நடிப்பதாக முன்னோட்டக் காட்சி மூலம் தெரிகிறது.

இந்த நிலையில், சுந்தரி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைவதால், வரும் டிச. 2 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு அன்னம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.