தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரை ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை: அப்புறப்படுத்தும் கடலோர காவல்படை!

காசிமேட்டில் கரை ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை கருவி...

News image

கப்பல் வழிகாட்டி மிதவை கருவி.

Updated On :29 நவம்பர் 2024, 10:02 am

DIN

வட சென்னை கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை கருவியை கடலோர காவல்படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்

ஃபெங்கால் புயல் எதிரொளியாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூரிலிருந்து காசிமேடு கடற்கரை - மெரீனா வரை கடல் அலைகள் சீறிபாய்ந்தவாறு உள்ளது.

இந்நிலையில் கடலில் கப்பல், படகு போன்றவைகளில் செல்பவர்கள் கடலின் ஆழம் குறித்து அறிவதற்கும், பாறைகள் இருக்கும் இடத்தை முன்கூட்டியே உணர்ந்து கொள்வதற்கும், திசை காட்டுவதற்கும் பயன்படும் கருவியான மிதவை கருவியொன்று கடந்த சில நாள்களுக்கு முன் வட சென்னை புதுவண்ணாரப் பேட்டை கடற்கரை பகுதியை ஒட்டி கரை ஒதுங்கியது.

வட சென்னை காசிமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கருவியை குறித்து கடலோர காவல் படையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, இதே போன்ற மிதவை கருவியொன்று மெரீனா கடற்கரையில் ஒதுங்கியதும், கடலோர காவல் படையினர் அப்புறப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.