ரத்த சோகையை போக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நீட்டிப்பு!
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தொடர்பாக.....

செறிவூட்டப்பட்ட அரிசி (கோப்புப்படம்)

செறிவூட்டப்பட்ட அரிசி (கோப்புப்படம்)
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை ஜூலை மாதம் முதல் டிசம்பர் 2028 வரை தொடர்ந்து வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், பிறநலத்திட்டங்களுக்கு ரூ. 17,082 கோடி ஒதுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹரியாணா: 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி 2022 ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துகள் அடங்கியுள்ளதாகவும், இந்த சத்துகள் ரத்த சோகையைத் தடுப்பதுடன், கருவளா்ச்சி, ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...