கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மழைத் தண்ணீரில் மிதக்கும் முதல்வர் தொகுதியான கொளத்தூர்!

முதல்வர் தொகுதியான கொளத்தூரில் பெய்துவரும் மழை தொடர்பாக...

News image

மழை நீரில் மூழ்கியுள்ள பெரவள்ளூர் கே 5 காவல் நிலையம்.

Din

Updated On :15 அக்டோபர் 2024, 10:12 am

DIN

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மழை நீரில் மிதக்கிறது.

பருவமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், பெரவள்ளூர் கே 5 காவல் நிலையம் மழை நீரில் மூழ்கியுள்ளது.

மழை நிலவரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். மேலும், சென்ட்ரல் அருகே உள்ள யானைக் கவுனி,புளியந்தோப்பு பட்டாளம், ஆகிய இரண்டு இடங்களிலும் ஆய்வில் ஈடுபட்டார்.

முதல்வரின் சொந்தத் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில், அதிகப்படியான மழைநீர் சூழ்ந்து இருந்த காரணத்தால் முதல்வர், தொகுதிக்கு உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜவஹர் நகர், ஜிகேஎம் காலனி 1-வது தெரு முதல் 30 வது தெரு வரையும், பெரியார் நகர், கார்த்திகேயன் சாலை, ஜவஹர் நகர் 1வது தெரு முதல் 10 வது தெரு வரையிலும் மற்றும் சோமசுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது.

மீட்புப் பணி குறித்து கொளத்தூர் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு உதவிட போலீஸாருக்கு மூன்று படகுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக போலீஸார் அங்கங்கே தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.