இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வயநாடு: பிரியங்கா காந்திக்கு எதிராகப் போட்டியிடும் இந்திய கம்யூ. கட்சி வேட்பாளர் யார்?

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு.

News image
சத்யன் மோகேரி
Updated On :18 அக்டோபர் 2024, 8:30 am

DIN

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து விதிகளின்படி, ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் வட மாநிலங்களில் கட்சியினை மேம்படுத்தும் நோக்கில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகத் தொடர்ந்தார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

நாட்டில் மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் 'இந்தியா கூட்டணி' என்ற பெயரில் ஒன்றிணைந்து கடந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றன.

ஆனால், கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிட்டன. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி(யூடிஎஃப்) என இரு கூட்டணிகளாக உள்ளன.

எனவே, வயநாடு இடைத்தேர்தலிலும் ஐக்கிய முன்னணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார்.

இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1987 முதல் 2001 வரை நந்தபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். 2014 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாநவாஸிடம் போட்டியிட்டு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

கடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட ராகுல் காந்தி 3.64 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கேரளத்தில் பாலக்காடு, செலக்கரா ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.