

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இன்று(அக். 30) பகல் 12 முதல் 1 மணி வரை அதிகபட்சமாக அண்ணாநகர் மேற்கு பகுதியில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அதேபோல், மணலி புதுநகர், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை பகுதிகளில் 60 மி.மீ. மழை” பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர், பெரம்பூர், மணலி, நெற்குன்றம், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.