/

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 23,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Updated On :20 செப்டம்பர் 2024, 4:40 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 23,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 2,997 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,106 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் 23,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 107.55 அடியிலிருந்து 10618 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 73.08 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.