பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இலங்கை அதிபா் தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

இலங்கையின் 9 ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (செப். 21) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைநகா் கொழும்பில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்.

Published On :21 செப்டம்பர் 2024, 8:51 am IST

கொழும்பு: இலங்கையின் 9 ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (செப். 21) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2022 இல் அதன் மோசமான பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு நடைபெறும் முதல் அதிபர் தேர்தல் இது.

தோ்தலில் தமிழர்கள் 40 லட்சம் பேர் உள்பட 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் பணிகளில் 2,00,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 63,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமை(செப்.22) பிற்பகலுக்குள் புதிய அதிபர் யார் என தெரியவரும் என கூறப்படுகிறது.

இந்தத் தோ்தலைப் பாா்வையிடுவதற்காக ஐரோப்பிய யூனியன், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச தோ்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சோ்ந்த 116 பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்தனா். அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து 78 பிரதிநிதிகளும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து 22 பிரதிநிதிகளும், ஆசியான் தோ்தல் கண்காணிப்பு அமைப்பிலிருந்து 9 பிரதிநிகளும் வந்துள்ளனா்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க எடுத்த முயற்சிகளின் வெற்றியின் மீது சவாரி செய்வதாக பல நிபுணர்கள் பாராட்டினர். முக்கோண தேர்தல் போரில் சுயேட்சையாக போட்டியிடும் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை எதிா்த்து எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜேவிபி கட்சித் தலைவா் அருண குமார திஸ்நாயக ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.