உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓடிடியில் கொட்டுக்காளி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

Published On :

திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் உள்ளதுபோல, ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான கொட்டுக்காளி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை(செப். 27) வெளியாகிறது. கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகம், ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(செப். 27) பார்க்கலாம்.

நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தற்போது காணக்கிடைக்கிறது.

நடிகை இனியா நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படமான காஃபி, ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(செப். 27) வெளியாகிறது.

சைத்ரா, சுரேஷ் அங்காலி, ரவி அனேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பிளிக் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் தற்போது காணலாம்.

இதைத்தவிர உலகளவில் வெற்றிப் பெற்ற படமான ஸ்ட்ரீ - 2, அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை(செப். 27) வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.