பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2025, 11:26 am IST

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில் இன்று (ஏப்.3) அதிகாலை 4 மணியளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஃபெர்னாண்டெல் பகுதியில் உண்டான காட்டுத் தீயானது வடமேற்கு திசையில் நகர்ந்து அருகிலுள்ள கேனிங் ஆற்று பகுதியில் பரவியுள்ளது.

இதுகுறித்து காலை 7 மணியளவில் அம்மாநில தீயணைப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், காட்டுத் தீயினால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், பாதைகள் தெளிவாகயிருந்தால் அப்பகுதிவாசிகள் உடனடியாக வெளியேறி மேற்கு திசையில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், உடனடியாக வெளியேற முடியாத மக்கள் தண்ணீர் வசதியுள்ள அறையில் பாதுகாப்பாக தஞ்சமடையுமாறு கூறப்பட்டிருந்தது.

பின்னர், காலை 8 மணியளவில் இந்தக் காட்டுத் தீயினால் மக்களின் வீடுகளுக்கோ அல்லது உயிர்களுக்கோ எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறி தீயணைப்புப் படை தனது செயல்பாடுகளைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளதால் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறிய மக்கள் உடனடியாக திரும்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தக் காட்டுத் தீயானது அதிகாலை 4 மணியளவில் கேனிங் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பூங்காவிலிருந்து துவங்கியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.