நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

புதுச்சேரியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்.

Published On :4 ஏப்ரல் 2025, 2:55 pm IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் இந்த திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசானது தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும், வக்ஃபு வாரியத்தின் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.