விக்கிரவாண்டி அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்து பலியான ஜார்ஜ் நெல்சன் (34)
விக்கிரவாண்டி அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்து பலியான ஜார்ஜ் நெல்சன் (34)

ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞர் வெள்ளிக்கிழமை தவறி விழுந்ததில் பலியானார்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞர் வெள்ளிக்கிழமை தவறி விழுந்ததில் பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் ஜார்ஜ் நெல்சன் (34). இவர் நாகர்கோவிலிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தவர் வெள்ளிக்கிழமை காலை விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் பகுதியில் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலியானார்.

இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com