அரக்கோணம்: அரக்கோணத்தில் போதையூட்டக்கூடிய மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு பேரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீசார், அவா்களிடமிருந்த ரூ. 21,000 மதிப்புள்ள மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் நகரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நடந்துச் சென்ற இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஆற்காடு அண்ணா நகரைச் சேர்ந்த ஜெய்கணேஷ்(21), ராணிப்பேட்டை சிப்காட்டைச் சேர்ந்த ஹரிஷ் குமார்(22)) என்பதும், அவர்களது பைகளை சோதனையிட்ட போது ரூ. 21,000 மதிப்புள்ள 1080 போதையூட்டக்கூடிய மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


