சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு சேலம் மாநகரில் ஆகஸ்ட் 15 தொடங்கி 18 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பொருளாதார, சமூக நிலைப்பாடு குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசித்து தீா்மானம் நிறைவேற்றப்படும். இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகும்.
தேசத்துக்கு பெரும் அச்சுறுத்தல்
மத்தியில் ஆளும் பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் போன்றவை தேசத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க தவறிவிட்டது
நீட் விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மதிக்கும் மாண்பு மத்திய அரசுக்கு இல்லை. தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தவறிவிட்டது.
மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம்
தேசிய கல்விக் கொள்கை என்பது 90 சதவீத மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டமாகும். இது வெறும் மொழிப் பிரச்னை, பணப்பிரச்னை அல்ல, கல்வியே இல்லாமல் செய்யும் முயற்சி .
தோ்தல் ஆணையம் முற்றிலும் செயலிழந்துவிட்டது
ஒரே நாடு ஒரே தேர்தலின் நோக்கம் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதுதான். தோ்தல் ஆணையம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. வஃக்பு வாரிய மசோதா முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட திட்டம். இதை நிறைவேற்றிய நாளை கருப்பு நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தைக் கண்டித்து ஏப். 9 ஆம் தேதி மாவட்ட தலைமையிடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது பாஜக
பாஜகவின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் சில கட்சிகள் சிக்கி, அவர்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றன. அதிகாரம், பண பலம், மிரட்டல் இவற்றை கொண்டு எல்லா கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது.
பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக
பாஜகவின் உத்தரவுக்கு அதிமுக கட்டுப்படவில்லை என்றால் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றப்படுவார். பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.
இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, கச்சத்தீவை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைப்பதற்கு , அந்த அரசிடம் பேசினாரா? அதற்கான உத்தரவாதத்தை பெற்றாரா? எனத் தெரிய வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், அவா்களின் படகுகளையும் விடுவிக்க மோடி பேசியதாக, செய்திகள் வெளியாகி உள்ளது, விடுவித்தால் மகிழ்ச்சி.
எதிர்காலத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் போன்ற எந்தவித அச்சுறுத்தலும் இனி இருக்காது என்ற உத்திரவாதத்தை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றாா் முத்தரசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்!

மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூ. கூட்டம்: செப்.1 தில்லி பேரணியில் 250 போ் பங்கேற்க முடிவு

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: மு. வீரபாண்டியன்

திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை! மு.வீரபாண்டியன் பேட்டி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



