எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

‘நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்’: குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2025, 5:05 pm IST

ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான தீர்வுக் காண வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைக்கேடு இருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.3 அன்று கொல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு ஷிக்‌ஷாக் ஷிக்‌ஷா அதிகார் மன்சாவின் பிரதிநிதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் முறையிட்டதாக குறிப்பிட்டு இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கொல்கத்தா நீதிமன்றம் அந்த தேர்வாணையை முழுவதுமாக ரத்து செய்தது. மேலும், இந்தத் தீர்ப்பை கடந்த ஏப்.3 அன்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

இந்த இரண்டு தீர்ப்புகளும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்தும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்யாமலும் பணியில் சேர்ந்துள்ளதை உறுதிச் செய்திருந்தாலும் இருதரப்பினரும் தங்களது வேலையைத் தற்போது இழந்துள்ளனர். ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் நடைபெற்ற குற்றம் கண்டிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், முறைகேடுகளில் ஈடுபடாத ஆசிரியர்களும் தண்டனை அனுபவிப்பது நியாமன்று.

மேலும், முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகக் கூடும். அந்த ஆசிரியர்களின் மன உறுதியும் ஊக்கமும் அழிக்கப்படுவதுடன் போதிய வருமானம் இன்றி அவர்களின் குடும்பங்களும் அவதிக்குள்ளாவார்கள்.

முன்னதாக, நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்; எனவே, இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படப்போகும் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை நீங்கள் நன்கு உணர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே, நீங்கள் இதில் தலையிட்டு முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர அரசு அனுமதிக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.