தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.










