கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
புது தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஹர்ஷவர்தன்
Updated On :1 பிப்ரவரி 2025, 9:38 am

DIN

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறிய வங்கதேசத்தினரை பிடிக்க தில்லி காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 21 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் கூறியதாவது, 21 வங்கதேசத்தினரில் 18 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

கைது செய்யப்பட்ட 3 பேரின் மீதும் பாஹர்கஞ்சு காவல் துறையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு, இந்திய ஆவணங்கள் மற்றும் வங்கதேசத்தின் கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் இருவர் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவினுள் சட்டவிரோதமாக குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு உதவி செய்த தரகரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.