பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்த ஷியா மற்றும் சுன்னி பிரிவைச் சேர்ந்த அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினர் இடையிலான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜன.4 அன்று கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருதரப்பு மக்களும் அந்நாட்டு அரசிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து 15 நாள்களுக்குள் சரணடைய சம்மதித்துள்ளனர்.
இதையும் படிக்க: அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு!
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பதுங்கு குழிகள் பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜன.10 அன்று பதுங்கு குழிகளை வெடி வைத்து தகர்க்கும் பணி மாவட்ட நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. மேல் மற்றும் கிழ் குர்ராம் மாவட்டத்தில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் இருப்பதாகவும் அதில் தற்போது வரை 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் இருக்குழுக்களுக்கும் மத்தியில் துவங்கிய மோதல்களில் 133 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற மியான்மர் ராணுவம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழப்பு: ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் 5 மாதங்களில் நேரிட்ட 740 விபத்துகளில் 175 போ் உயிரிழப்பு, 800 போ் காயம்

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



