சென்னையில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு கொட்டுகிறது.
சென்னையில் நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால், புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணையைவிட 7 - 15 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி
அதேபோல், பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை செல்லும் செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் சில விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டுள்ளன.
குவைத்தில் இருந்து 148 பயணிகளிடன் வந்த விமானம் சென்னையில் தரையிரங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருகிறது.
இதனிடையே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
சென்னையில் அதிகாலை அடர் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றும் நாளையும் 6 மெமு ரயில்களின் சேவை 8 பெட்டிகளுடன் இயக்கம்

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

நுங்கம்பாக்கம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: புறநகா் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



