பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாதுகாப்புப் படையினரால் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

News image

நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்)

Updated On :9 பிப்ரவரி 2025, 6:08 am

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜப்பூர் மாநிலத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில் இன்று (பிப்.9) காலை பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.31 அன்று பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த ஜன.6 அன்று நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. அதில், ஓட்டுநர் ஒருவர் உள்பட 8 மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள நக்சல்கள் அழிக்கப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.