தாய்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 7) மாணவர் ஒருவர் நடததிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துப்பாக்கிச் சூடில் ஈடுபட்ட குற்றவாளி என 8 பேர் கொல்லப்பட்டதாக, காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர், அந்தப் பள்ளியின் சீருடையை அணிந்திருந்தார் என்றும், அவர் இந்தப் பள்ளியின் மாணவரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும், பள்ளிக்கு வருவதற்கு முன்பு வீட்டில் தன்னுடைய தாத்தா - பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு நேராக பள்ளிக்கு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கியில் 26 சுற்றுகள் சுட்டிருப்பதும், சம்பவ இடத்தில் சுடப்படாமல் 34 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்கின் வடமேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள டெப்சிரின் நோந்தபுரி பள்ளியில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் சிக்கி தப்பிய ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுததைப் பார்ப்பவர்கள் மனது கலங்குவதாக இருந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்ததும் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் குழு, பள்ளி வளாகத்திலேயே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்கையும் முதலுதவி சிகிச்சையும் அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது பற்றி காவல்துறை கூறுகையில், கொல்லப்பட்ட எட்டு பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவார் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பதினைந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Summary
8 person killed Thailand school shooting Killer murdered grandparents
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி

ஜொ்மனியில் இளைஞா் நலக் காப்பக்கத்தில் துப்பாக்கிச் சூடு!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



