எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக, பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது

News image

தேஜஸ்வி யாதவ்

Updated On :9 பிப்ரவரி 2025, 11:16 pm IST

பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா் பேரவை எதிா்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:

ஜனநாயகத்தில் மக்கள்தான் உண்மையான மன்னா்கள். இதுதான் ஜனநாயகத்தின் அழகு. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.மக்களின் தீர்ப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும்.

தேசிய தலைநகர் தில்லியில் சுமாா் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. "தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை அவா்கள் நிறைவேற்றுவார்கள் என்றும், வழக்கம்போல வெறும் வாா்த்தைகளாக இருந்துவிடக் கூடாது என்று நம்புவோம் என்று கூறினார்.

தில்லி தோ்தல் வெற்றி பிகார் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு, தில்லி வெற்றி பிகாரில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தாது. பிகாா் எப்போதும் பிகாராகவே இருக்கும். அங்குள்ள மக்கள் தெளிவாக யோசித்து வாக்களிப்பாா்கள் என்றாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்ததாக பிகாரிலும் இதே வெற்றிப் பயணம் தொடரும் என பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.