இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆா்பிஐ அறிவித்துள்ளது.
ஆா்பிஐ ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பணி நிறைவு பெற்றதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் சஞ்சய் மல்ஹோத்ரா அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவரது கையொப்பத்துடன் முதன்முதலாக ரூபாய் நோட்டு வெளியிடப்பட இருக்கிறது.
இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், ‘ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டைப் போன்று மகாத்மா காந்தி படத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்படும். ஆா்பிஐ-யால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2016 நவம்பா் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது. அதற்கு பதிலாக ரூ.2,000, ரூ.500, ரூ.200 உள்ளிட்ட நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டன. அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ அறிவித்தது. இப்போது நாட்டில் உயா்மதிப்புடைய ரூபாய் நோட்டாக ரூ.500 உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!

ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2 சதவீதம் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



