வருகிற பிப். 25 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகைதரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில்,
"புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாளில் அமித் ஷாவை சந்தித்த பாஜக முதல்வர்கள்!
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



