ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் பலியானார்கள்.
அன்னமய்யா மாவட்டத்தின் ஒபுலவரிப்பள்ளி கிராமத்திலுள்ள வனப்பகுதி வழியாக தலக்கோணா கோயிலுக்கு 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவொன்று இன்று (பிப்.25) பாத யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அங்கு வந்த யானைக் கூட்டம் ஒன்று பக்தர்களை விரட்டி தாக்கியுள்ளது.
இதில், 3 பக்தர்கள் சம்பவயிடத்திலேயே பலியானார்கள். இந்த தாக்குதலில் மேலும் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் பலியானோரது உடல்களை மீட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 15 யானைகள் அடங்கிய கூட்டம் பக்தர்களைத் தாக்கியிருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உயிர் பிழைத்த மற்ற பக்தர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்: அதிமுக வேட்பாளா்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் இருவா் காயம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


