ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

பாரிஸில் ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தைக் கொல்லப்பட்டதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸிலுள்ள ஹோட்டலின் இரண்டாவது தளத்திலுள்ள ஜன்னலின் வழியாக பச்சிளம் குழந்தை ஒன்று நேற்று (பிப்.24) காலை வீசப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே பலியாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

ஐரோப்பாவிற்கு இளம் குழுவினரோடு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள 18 வயதுடைய பெண் ஒருவர் தனது ஹோட்டல் அறையில் குழந்தையை பெற்றெடுத்து அங்குள்ள ஜன்னல் வழியாகக் வீசியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைப் பெற்ற பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாரிஸ் காவல் துறையினரால் அந்த பெண் தற்போது காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரிக்கும் பணி குழந்தைகள் பாதுகாப்பு காவல் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இது கர்ப்பம் மறுப்பாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பிரசவம் வரை தனது கர்ப்பத்தைப் பற்றி அறியாமலோ அல்லது அதனை முழுவதுமாக நிராகரித்தோ இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com