மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த சின்ன திரை நடிகர்!

தந்தையாகப்போவதை அறிவித்த சின்ன திரை நடிகர் அவினாஷ்.

Published On :

சின்ன திரை நடிகர் அவினாஷ் மகிழ்ச்சி செய்தி ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு தொடர் மூலம் சின்ன திரையில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அவினாஷ். இத்தொடரின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், அடுத்தடுத்து அம்மன், சாக்லேட் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார்.

இதனிடையே கயல் தொடரில் நடித்துவந்த அவினாஷ், திடீரென்று இத்தொடரில் இருந்து விலகினார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Story image

நடிகர் அவினாஷ் பள்ளிக் காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் காதலித்து வந்த தெரசா மரியாவை கடந்த செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், அவினாஷ் தான் தந்தையாகப்போவதை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story image

அவினாஷ் - தெரசா மரியாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் நடிகை அன்ஷிதாவின் சகோதரர்தான் அவினாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.