நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்! 17 வயது மாணவன் கைது!

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 17 வயது மாணவன் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜனவரி 2025, 8:34 am

மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிகாரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா வரும் ஜன. 13-ஆம் தேதி முதல் பிப். 26-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் திவிவெடி (வயது 17) என்ற சிறுவன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.

தனது வகுப்பு தோழனுடன் ஏற்பட்ட பிரச்சையினால் அவனைப் பழிவாங்க, தனது தோழனின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கும்பமேளாவில் வெடிகுண்டு வைத்து 1,000 பக்தர்களை கொல்ல போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், அந்த பக்கத்தில் கும்பமேளாவிற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மேள கொட்வாளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், பிகாரில் அந்த சிறுவனைக் கண்டுபிடித்து அவனைக் கைது செய்து தற்போது சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.