உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
சொறாஹா கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த 250 கிலோ வாட் அளவிலான மின்மாற்றியைக் கழற்றிய திருடர்கள் அதிலிருந்து எண்ணெய் மற்றும் முக்கிய பாகங்களையும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாநில மின்சார துறையினர் இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த 25 நாள்களாக வேறொரு புதிய மின்மாற்றி நிறுவப்படாமல் அந்த மொத்த கிராமமும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சுமார் 5,000 பேர் வசிக்கும் அந்த மொத்த கிராமமும் மாலை சூரியன் மறைந்த பின்னர் இருளில் மூழ்கும் அவல நிலை அங்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மின்சாரம் இல்லததினால் செல்போன் பயன்படுத்துவதற்குக் கூட அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டது குறித்து காவல் துறையிடம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதியதொன்று நிறுவ அரசிடம் பரீந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரிரு நாள்களில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டுவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாள்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொது தேர்வுகள் நடைபெற இருக்கும் சூழலில் அந்த கிராமத்தின் மாணவ மாணவியர் கல்வி கற்பது தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஊதிய உயர்வு போதவில்லை; உ.பி.யில் தொடரும் போராட்டம்!
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

16 நாள்கள் சோதனையில் ரூ. 78.85 லட்சம் பறிமுதல்

உற்சாகக் குளியல்...
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

