காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்! 3 பேர் கைது!

அசாமில் போதைப் பொருள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

கோப்புப் படம்

Published On :10 ஜனவரி 2025, 10:00 pm IST

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தின் சாச்சர் மாவட்டத்தின் கட்டிகோரா பகுதியில் அசாம் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இன்று (ஜன.10) நடத்திய சோதனையில் பக்கத்து மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.1 கோடி மதிப்புள்ள 442 கிராம் அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன். அதனை கடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இதேப்போல் அசாமின் கர்பி அங்லோங் மாவட்டத்தில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அண்டை மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் 9.11 கிலோ அளவிலான ஓப்பியம் மற்றும் 1,030 கிலோ அளவிலான மார்ஃபைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த போதை பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.