திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

மலப்புரம் திருவிழாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் பலி!

மலப்புரத்தில் மசூதி திருவிழாவின்போது யானை மிரண்டு ஓடியதில் படுகாயமடைந்தவர் பலியாகியதைப் பற்றி...

News image

கூட்டத்தில் இருந்த ஒருவரை அந்த யானை தூக்கி வீசிய விடியோ.

Updated On :10 ஜனவரி 2025, 5:28 pm IST

கேரள மாநிலம் மலப்புரத்தில் மசூதி திருவிழாவின்போது அழைத்து வரப்பட்ட யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.

மலப்புரத்தின் திரூரிலுள்ள மசூதி திருவிழாவிற்காக கடந்த ஜன.8 அன்று யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து அருகிலிருந்தவர்களை தாக்கியது.

அப்போது எழூரைச் சேர்ந்த கிருஷ்ணகுட்டி (வயது 59) என்பரை அந்த யானை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோட்டக்கலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அவரது உடல் நிலை தொடர்ந்து மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜன.10) அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

முன்னதாக, திருவிழாவின் போது மதம் பிடித்து மிரண்டு ஒடிய யானையிடம் இருந்து தப்பித்து ஒட முயன்றவர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பின்னர், நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த யானை பாகன்களால் கட்டுப்படுத்தப்பட்டு சங்கிலியில் பிணைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.