மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாதுகாப்புப் படையினரால் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

News image

பாதுகாப்புப் படை - (கோப்புப் படம்)

Updated On :12 ஜனவரி 2025, 7:55 am

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

பிஜப்பூரின் இந்திரவதி தேசியப் பூங்காவின் எல்லைக்குட்பட்ட காடுகளில் இன்று (ஜன.12) காலை மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

அப்போது இருதரப்புக்கும் மத்தியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. தாக்குதல் நின்றபின்னர் நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்தில் சென்று பார்த்தப்போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட 3 நக்சல்களும் அவர்களது படையின் சீருடையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தாண்டு நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.