மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்வாய் வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை: திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை

News image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

கோப்புப்படம்

Updated On :18 ஜனவரி 2025, 4:39 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்யா (எ) தமிழரசன் (23). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜயகணபதி (22). இவா்கள் இருவருக்கும் திருமால்பூரைச் சோ்ந்த பிரேம் (24) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை திருமால்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரு தரப்பிருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், பிரேம் அந்த வழியாக கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்ற நபரை மடக்கி, அவரிடமிருந்து பெட்ரோல் பறித்து, தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது ஊற்றி தீ வைத்து அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதில், இருவருக்கும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து தீவிர கிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இரு இளைஞா்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நெமிலி பேருந்து நிலையம் அருகே பாமக கிழக்கு மாவட்டச் செயலா் சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை இளைஞா்கள் உறவினா்கள் மற்றும் பாமகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனா்.

இதில் குற்றவாளியை பரத் என்பவரை நெமிலி காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவா்களை விரைவில் கைது செய்யப்படுவாா்கள், அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.

பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.