தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி!

ஜம்முவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலியாகியதைப் பற்றி..

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜனவரி 2025, 12:14 pm

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோப்போர் மாவட்டத்தின் ஜலூரா குஜ்ஜார்பதி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினர் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (ஜன.19) இரவு முதல் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (ஜன.20) அதிகாலை துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, இருதரப்புக்கும் மத்தியிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், அவரை அங்கிருந்து மருத்துவ உதவிக்காக ராணுவத்தினர் மீட்டு வெளியே கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், அவர் அதற்குள் பலியானார்.

பலியான ராணுவ வீரர் குறித்த தகவல்கள்எதுவும் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.