சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
எண்ணூர் ரயில் நிலைய மேலாளர் அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வழித்தடத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்படுவதால், பணி முடிந்து வீட்டிற்குச் செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டுக்குச் செல்லும் மாணவா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், சமீபகாலமாக இதுபோன்ற கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதை சரிசெய்ய ரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


