ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மனித மண்டை ஒடை வைத்து விளையாடிய தெருநாய்கள்! விடியோ வைரல்!

மத்தியப் பிரதேசத்தில் தெரு நாய்கள் மனித மண்டை ஓடை வைத்து விளையாடியது குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது...

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2025, 2:07 pm IST

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரியின் விடுதி அருகே தெரு நாய்கள் மனித மண்டை ஓடை வைத்து விளையாடிய விடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

கடந்த ஜன.29 அன்று இரவு ஜபால்பூரிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியின் பின்னால் மனித மண்டை ஓடு போன்ற வடிவிலுள்ள எழும்பை இரண்டு தெரு நாய்கள் கவ்வி விளையாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து, அந்த மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவர் நவநீத் சாக்ஸேனா கூறியதாவது இந்த விவகாரம் குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது என்றும் அது மனிதனுடைய மண்டை ஓடுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஆனால், விடியோவில் காணப்பட்ட மண்டை ஓடு அங்கில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த விடியோவில் தெரிந்தது மனித மண்டை ஓடா அல்லது அருகிலுள்ள ஏரியிலிருந்து ஏதேனும் அந்த நாய்கள் கவ்வி இழுத்து வந்தனவா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

இருப்பினும், ஒருவேளை அது மனித மண்டை ஓடு என்று உறுதி செய்யப்பட்டால், அதனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயில அவர்களது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.