தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News image

பாபநாசம் அணை

Updated On :26 ஜூலை 2025, 11:54 am IST

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் தெற்கு மற்றும் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு அளவில் கார் பருவ சாகுபடி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4401.12 கனஅடி நீர்வரத்து உள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் 15 மி.மீ., சேர்வலாறு அணையில் 14 மி.மீ., மழை பதிவாகியுள்ளன.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 139.50 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95.62 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 487.81 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 175 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 4.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மழையளவு (மில்லி மீட்டரில்):

கன்னடியன்கால்வாய் 9 மி.மீ., அம்பாசமுத்திரம் 20 மி.மீ., சேரன்மகாதேவி 6.40 மி.மீ.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Summary

Cheran Mahadevi. Due to continuous rains in the catchment area of the dams in the Western Ghats, the water inflow to the Papanasam and Manimutharu dams in Tirunelveli district has increased significantly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.