
கோவையில் இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இளையராஜா இன்று காலை கோவை வந்துள்ளார்.
தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள இளையராஜாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார்.
பின்னர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
"கோவையில், இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானியின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும் அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதைவிட மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப்போகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.