பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கியுள்ள அமைப்பு சாா்பில் முதல் மாநாடு பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘வி தி லீடா்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளாா்.
இதில், சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பு சாா்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ‘போதையில்லாத பொள்ளாச்சி’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
கே.அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக பொள்ளாச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிபட்டி அருகே 15 ஏக்கா் நிலம் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளான குடிநீா், கழிப்பறை வசதி, மருத்துவக் குழுவினா் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்க்கு மாற்றா? அண்ணாமலை மாநாடும் அரசியல் பாதையும்!

அண்ணாமலை அமைப்பின் முதல் மாநாடு தொடக்கம்!

திருச்செந்தூரில் அண்ணாமலையின் 2வது மாநில மாநாடு!

பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு! அண்ணாமலை அறிவிப்பு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



