
மேட்டூா்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியிலிருந்து 6,896 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை 6,327 கன அடியாக இருந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளிக்கிழமை காலை 6,896 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 114.89 அடியாக உள்ளது.
அணையின் நீா் இருப்பு 85.55 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.