ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
Published on
Updated on
1 min read

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நீரானது தமிழகம் வந்தடைந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தற்காலிக தடை விதித்துள்ளார்.

தடை உத்தரவின் பெயரில் பிரதான அருவி செல்லும் நடைபாதையினை வருவாய்த்துறை பூட்டினர். நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com