புதுதில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாகவும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,
பணத்தின் பேராசைக்காக இளைஞா்களை போதைப் பொருள் என்ற இருண்ட படுகுழியில் இழுத்துச் செல்லும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் விளைவாக, நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) மட்டும் 12 வெவ்வேறு வழக்குகளில் 29 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
2019-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இந்த ஆண்டில் இதற்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத், போபால், சண்டிகர், கொச்சின், டேராடூன், தில்லி, ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, லக்னௌ ஆகிய மண்டலங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தண்டனைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்வதற்கான தேசிய போதைப்பொருள் தடுப்பு மையத்தின் (என்சிபி) செயல்களுக்கான எடுத்துக்காட்டு என கூறினார், போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என மீண்டும் தெரிவித்தார்.
அமித்ஷா தலைமையின் கீழ், 2047-க்குள் இளைஞா்களை போதைப் பொருள்களில் இருந்து பாதுகாத்து, போதைப் பொருள்களற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு போதைப்பொருள் தடுப்பு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை என்சிபி உதவி எண் 1933 இல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதச்சாா்பற்ற கொள்கையில் விஜய் அரசு உறுதியாக இருக்க வேண்டும்! பெ. சண்முகம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணம் போதைப் பொருள் புழக்கம்தான்!

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: அமித் ஷா
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




