வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

28 சிறுமிகள் உள்பட மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

தில்லியில் மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2025, 5:07 pm IST

புது தில்லியில் கடந்த 2 மாதங்களில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ரோஹினி நகரத்தில் கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரையிலான 2 மாதக் காலத்தில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி அமித் கோயல் கூறுகையில், குழந்தைகள் கடத்தப்பட்டது மற்றும் காணாமல்போனது குறித்த தகவல் கிடைத்தவுடன் அப்பகுதி காவல் துறையினர் விரைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு குழந்தைகளைக் கண்டுபிடித்து மீட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரோஹினி நகரத்தின் அமன் விஹார், பிரேம் நகர், கஞ்சாவாலா, பேகம்பூர், கேஎன்கே மார்க், பிரசாந்து விகார், புத் விஹார், வடக்கு ரோஹினி மற்றும் விஜய் விஹார் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த மாயமான குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் சோதனைச் செய்யப்பட்டு, மாயமான அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் ஆட்டோ நிறுத்தங்களிலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடமும் வழங்கப்பட்டு தேடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் தகவல் தருபவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் உதவிகளோடு குழந்தைகளை தில்லி காவல் துறையினர் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.